காவியத்தை பின்தொடர்தல்
‘பழையதொரு கதைபற்றிய தொடர்நிலைச் செய்யுள்’ என்று காவியத்தை வரையறுக்கிறது அகராதி. எல்லா வகையிலும் காவியம் என்ற வகைமைக்குள் அடங்குவதாயினும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு எனும் நாவல் வரிசை தமிழில் புனைவெழுத்தை புதிய தளமொன்றிற்கு எடுத்துச்செல்வது. ஒரு காவியத்தை அது எழுதப்படும்போதே படிக்கும் வாய்ப்பு இந்நூற்றாண்டு வாசகனுக்குக் கிடைத்த ஒரு நவீன அனுபவம்.
மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவல் ஜனவரி 2014 முதல் அவரது வலைதளத்தில் தினமும் ஒரு பதிவாக வெளியிடப்பட்டு 16 ஜூலை 2020 அன்றோடு நிறைவுபெற்றது.
செந்நா வேங்கை
திசைதேர் வெள்ளம்
கார்கடல்
இருட்கனி
தீயின் எடை
நீர்ச்சுடர்
களிற்றியானை நிரை
கல்பொருசிறுநுரை
முதலாவிண்
என மொத்தம் இருபத்தி ஆறு நூல்கள். செந்நா வேங்கை முடிய பதினெட்டு நூல்கள் அச்சிலும் வெளியாகியுள்ளன.
அனைத்து நூல்களும் கிண்டில் பதிப்பாக கிடைக்கின்றன.
ஓவியங்கள்: ஷண்முகவேல்
Recent Comments